Monday, July 21, 2025

சொத்து விற்பனை ஒப்பந்தம் காலாவதியாகும் நிலையில் ஏற்படும் சிக்கல்கள்!

 

பொதுவாக ஒரு வீடு அல்லது மனையை வாங்க விரும்புவோர்அதற்கான விலையை பேசி முடிவு செய்ய வேண்டும்.  விற்பனையாளரின் உரிமை தொடர்பான பத்திரங்களை சரியாக ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.

இது போன்று கூடுதல் விலை கிடைத்தால்விற்பனையாளரின் எண்ணம் மாறுவது இயல்பு தான்.  ஆனால்ஒரு விலையை பேசி வைத்துவிட்டுஅதன் அடிப்படையில் மற்ற ஏற்பாடுகளை கவனிப்பவர் இதனால் பாதிக்கப்படுவார்.

இது போன்ற குழப்பங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.  இதன் படிவிற்பவர்வாங்குவோர் இருவரும் இணைந்து ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலும்முன்பணம் கொடுத்ததில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க கெடு நிர்ணயிக்கப்படுகிறது.  ஆனால்வங்கிக்கடன் பெறுவது தொடர்பாக ஏதாவது தாமதம் ஏற்பட்டால்இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டிய தேவை எழும்.  பொதுவாகஇது போன்ற ஒப்பந்தத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பிரச்னைகள் குறித்து யாரும் எதுவும் தெரிவிப்பதில்லை.  சொத்து வாங்குவோர் போன்று விற்பவருக்கும் சில பிரச்னைகள் ஏற்படலாம்.

அதன் காரணமாகவும் பத்திரப்பதிவு தாமதிக்கப்படலாம்.  இத்தகைய சூழல்களை தவிர்க்க விற்பனை ஒப்பந்தம் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.  எதிர்பாராத காரணங்களால் பத்திரப்பதிவு தாமதமானால்ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு மாதம் தானாகவே ஒரு மாதம் நீடிக்கலாம்.

இதற்கான ஷரத்துக்களை விற்பனை 
ஒப்பந்த வரைவில் சேர்க்க வேண்டும்.  இவ்வாறு செய்வதால்கூடுதலாக ஒரு சில நாட்கள்வாரங்கள் தாமதத்துக்காக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்காது.  வீடுமனை வாங்குவோர்இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத்துறையினர். 

இதன் பின்வங்கிக்கடன்பத்திரப்பதிவு ஏற்பாடுகளை முடிக்கும் வரையிலான 

காலத்தில் வேறு நபர்கள் அந்த வீட்டை 
வாங்கவிடாமல் இருக்க வேண்டும்.  உதாரணமாகநீங்கள்,35 லட்ச ரூபாய்க்கு விலை பேசிய வீட்டை,38 லட்ச ரூபாய்க்கு வாங்க 
இன்னோருவர் வரலாம்.

No comments:

Post a Comment